பெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்று கூறுவதுண்டு. அது உண்மையும் கூட. ஒரு தாய் தனது குழந்தைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார். ஆனால் ஒருசிலர் இதில் விதிவிலக்காக இருப்பதால் தாய்மைக்கே களங்கம் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையில் சிகரெட் புதைத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள டென்னிஸி என்ற பகுதியில் வசிக்கும் டைப்ரஷா செஸ்டோன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவர் ஒரு கையில் வைத்து கொண்டு மறு கையில் சிகரெட்டை புதைத்தது மட்டுமின்றி அந்த குழந்தையை அவர் ஒற்றைக்கையில் அலட்சியமாக தூக்கி இறக்கிய திடுக்கிடும் காட்சி வைரலாகி வரும் வீடியோவில் உள்ளது
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை எவ்வளவு கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற பொருப்பே இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதத்தை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.