''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி அந்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அதெப்படி, வடகொரியா கொரோனா வைரஸ்க்கு சாதகமாக இன்னும் ஒரு எண்ணைக்கூட தெரிவிக்கவில்லை என்று தற்பேது உலக நாடுகள் வியப்பை தெரிவித்து வருகின்றன.

இதற்கு கொரோனா தடுப்புக்காக அந்நாடு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் காரணம் எனவும் ஒருபக்கம் கருத்து கூறப்படுகிறது. உண்மையில் வடகொரியா கொரோனா பரவல் ஆரம்பித்த நாட்களில் இருந்தே கடுமையான பாதுகாப்புகளை மேற்கொண்டது. கடந்த ஜனவரி முதலே விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்தை அந்நாடு முழுவதுமாக தடைசெய்து இருந்தது.

ஆனாலும், நாட்டில் எவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது சந்தேகத்தை வரவழைப்பதாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க தூதரக ஜெனரல் ராபர்ட் அப்ராம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். எங்களுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின்படி இது உண்மையே இல்லை எனவும் குறிப்பிடுகிறார். மேலும், வடகொரியா, சீனா மற்றும் தென்கொரியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து இருக்கிறது. பல பொருளாதார நடவடிக்கைகளையும் எல்லைகளின் வழியாக நடத்தும்போது இது சாத்தியமே இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

கொரேதானா பரவலுக்கு எதிராக, ஆசிய நாடுகளில் உள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும் வடகொரியா மிக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஜனவரி மாதத்தின் இறுதியில் அந்த நாட்டில் எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டு இருக்கிறது. மேலும், விமானம், கடல் போக்குவரத்து சேவையும் முழுமையாக தடை செய்யப்பட்டது. அந்நாட்டிற்கு அதுவரை வந்திருந்த வெளிநாட்டினரையும், வெளிநாடு சென்று திரும்பியவர்களையும் நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அந்நாட்டு செய்தி நிறுவனமான என்.கே. நியூஸ் 10 ஆயிரம் நபர்களை அந்நாடு தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

கொரோனாவை விரட்ட சின்னச்சின்ன விஷயங்களை செய்தால் போதும்: தமன்னா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை

நயன்தாரா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஆர்கே செல்வமணி

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஓரின திருமணத்தை ஒத்திவைத்த கிரிக்கெட் வீராங்கனை

https://www.dinamani.com/sports/sports-news/2020/apr/04/south-africa-woman-cricketer-lizelle-lees-marriage-on-hold-owing-to-coronavirus-pandemic-3394277.html