பெரும்பாலான மக்களின் உணவு பூச்சிகள்தான்… பதற வைக்கும் வடகொரியாவின் உண்மை முகம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

வடகொரியாவில் இருந்து தப்பி பல நெருக்கடிக்குப்பின் நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஒரு இளம்பெண் வடகொரியாவின் கோர முகத்தை தற்போது வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். அவர் பெயர் யியோன்மி பார்க். வடகொரியாவில் தனது 13 வயதுவரை ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியும் அங்கு தனது குடும்பம் பட்ட அவலத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட பார்க் வடகொரியாவில் தற்போது நடந்து வரும் அவலமான ஆட்சி அதிகாரத்தைக் குறித்தும் கருத்துக் கூறியிருக்கிறார்.

பார்க் வடகொரியாவில் 13 வயதுவரை மட்டுமே வாழ்ந்திருக்கிறார். “அங்கு இருந்த காலகட்டம் வரைக்கும் நான் பூச்சிகளைத்தான் உண்டு வந்தேன். அங்கு பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக வெறும் பூச்சிகள் மட்டும்தான் இருக்கும். மற்ற நாடுகளில் உள்ள நகர அமைப்புகளை எல்லாம் வடகொரியாவில் பார்க்க முடியாது. வீடுகள் எல்லாம் சேரிகளைப் போலத்தான் காட்சி அளிக்கும். மக்கள் பெரும்பாலும் புரதச் சத்துக்காக பூச்சிகளைத்தான் நம்பியிருக்கின்றனர். அதுவும் கிடைக்காவிட்டால் நிலைமை திண்டாட்டம்தான்.

மேலும் பள்ளி, கல்லூகளில் காதல் என்ற அடையாளத்தைக்கூட பார்க்க முடியாது. வடகொரியாவில் மின்சாரம்கூட அரசாங்கத்தின் பொதுச்சொத்தாக இருக்காது. மக்கள் இன்றளவும் நெருக்கடியான நிலைமையில்தான் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தெருக்களில் எங்குப் பார்த்தாலும் கேட்பாரற்ற சடலங்கள் நிரம்பி வழியும்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பார்க்.

வடகொரியாவைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையும் அவ்வபோது எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வடகொரியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 43% பேர் நாளொன்றுக்கு ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிடுகின்றனர் என ஐ.நா சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனால் அதிபரான கிம் ஜாங் உன்னின் நிர்வாகம் கோடி கணக்கான டாலர்கள் செலவு செய்து அணுஆயுதம் தயாரிக்க முனைப்பு காட்டுவதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியிருந்தது.

சமீபத்தில் கொரோனா தாக்கத்தால் வடகொரியாவில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் அனைவரும் செல்லப் பிராணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இந்தத் தகவலைக் கேட்டு உலகநாடுகள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தின. அந்தளவிற்கு நெருக்கடியான நிலையில்தான் தற்போது வடகொரியா இருந்து வருகிறது. ஆனால் அணுஆயுத சோதனையை மட்டும் அந்நாடு எப்போதும் நிறுத்துவதே இல்லை என்பதுதான் வருத்ததைக் கொடுக்கிறது.

More News

'பிக்பாஸ் 4' புதிய வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

அடித்தது ஜாக்பாட்…ஒரு லாட்டரியில் ரூ.20 கோடி வென்ற இந்தியர்!!!

ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் லாட்டரி குலுக்கல் என்பது மிகவும் வரவேற்பு கொண்ட ஒரு விஷயமாகப் பார்க்கப் படுகிறது. காரணம்

4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட பலே கில்லாடிகள்!!! மோப்பம் பிடித்த போலீஸ்!!!

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா பகுதியில் 4 ஏக்கர் விளைநிலத்தில் கஞ்சா

ஆசிரியராகும் கனவு… 1,200 கி.மீ தூரத்தை மொபட்டில் கடந்துவந்த கர்ப்பிணி பெண்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை, தேர்வு எழுதுவதற்காக 1,200

சூரரை போற்று' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி