close
Choose your channels

நான் நடிகையினு என் பையனுக்கு தெரியாது - பூர்ணிமா பாக்யராஜ்

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

1980-களில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்தவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். தற்போது இவர் சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆடை வடிவமைப்பின் மீதுள்ள தன்னுடைய ஆர்வத்தை பற்றியும் சினிமாவில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றியும் நமக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உங்களுடைய உடை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் நிறம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உடைகள் மீதான உங்கள் ஆர்வம் எப்போது ஆரம்பித்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நல்ல நிறத்தில் உடைகளை தேர்வு செய்து அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும் தற்போது சினிமா துறையிலும் நான் அந்த வழக்கத்தை கடைபிடிக்கிறேன் என்று பதிலளித்தார்.

திருமணத்திற்கு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று நான் தான் முடிவு எடுத்தேன். குடும்ப வாழ்க்கையில கவனம் செலுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். பின் குழந்தைகள் மற்றும் அவர்களின் பள்ளி போன்றவற்றை கவனித்து கொண்டதால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை மற்றும் குடும்ப வாழ்கை மிகவும் பிடித்து போனதால் நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன் என்று பதிலளித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.