close
Choose your channels

சரத்குமார் கட்சியில் ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு!

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி, அதிமுகவுடன் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமார் வரும் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் மீண்டும் சரத்குமார் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு அக்கட்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராதிகா அதிகாரபூர்வமாக அரசியலில் குதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ராதிகாவும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.