தன்னை தானே தனிமை படுத்திகொண்ட மணிரத்னத்தின் மகன்

  • IndiaGlitz, [Sunday,March 22 2020]


உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா Covid-19 (novel வைரஸ் ஒருவரது உடலில் 14 நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மைக் கொண்டது. எனவே, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பியவர்களை இந்திய சுகாதாரத்துறை குறைந்தது 14 நாட்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. வைரஸ் அறிகுறி இருப்பவர்களை சுகாரதாரத்துறை தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தும் வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வைரஸ் அறிகுறிகளோடு இல்லாவிட்டாலும் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகை சுஹாசினி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சுஹாசினியின் மகன் நந்தன் லண்டனிலிருந்து கடந்த 18 ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளார். அவர் வந்ததிலிருந்து தனியறையில் வைத்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். உணவு முதற்கொண்டு எதற்காகவும் வெளியே வராதபடி கடுமையான பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கிறார். வைரஸ் அறிகுறி எதுவும் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஒவ்வொருவரும் இப்படி தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நோய் பரவாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த வழிமுறை எனத் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

 நடிகை சுஹாசினி வெளியிட்ட இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

ரஜினியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் டுவீட்டும் நீக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று டுவிட்டரில் பதிவு செய்துள்ள வீடியோவை டுவிட்டர் இந்தியா அதிரடியாக நீக்கியது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் குறித்து அவர் கூறிய கருத்து சந்தேகத்திற்கு

மார்ச் 21 வரலாற்றில்  இன்று!!! உலக பொம்மலாட்ட தினம், உலக கவிதை தினம்… இன்னும் பிற…

உலகம் முழுவதும் கொரோனா பீதியில் இருக்கும்போது வரலாற்றில் முக்கியமான நாட்களையும் தினங்களையும் பற்றிய நினைவில்லாமலே கடந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.

144 தடை உத்தரவு போட தயங்க மாட்டேன்: முதல்வர் எச்சரிக்கையால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் கேரளா முக்கிய மாநிலமாக உள்ளது. கேரள மாநிலத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை

கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

நமக்காக போராடுபவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: தனுஷ்

ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.