அரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்றும் அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து விடுதலை ஆனதிலிருந்து அமைதியாக இருந்த சசிகலா தற்போது அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்குகிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நான்‌ என்றும்‌ வணங்கும்‌ என்‌ அக்கா புரட்சித்‌ தலைவியின்‌ எண்ணத்திற்கு இணங்க அவர்‌ கூறியபடி இன்னும்‌ நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில்‌ புரட்சித்‌ தலைவர்‌ மற்றும் இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மாவின்‌ பொற்கால ஆட்சி 'தொடர, ஒரு தாய்‌ வயிற்றுப்‌ பிள்ளைகளான அம்மாவின்‌ உண்மைத்‌ தொண்டர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன்‌ வரும் தேர்தலில்‌ பணியாற்றிட வேண்டும்‌.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில்‌ அமர விடாமல்‌ தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின்‌ பொற்கால ஆட்சி தமிழகத்தில்‌ நிலவிட அம்மாவின்‌ தொண்டர்கள்‌ பாடுபடவேண்டும்‌. என்‌ மீது அன்பும்‌ அக்கறையும்‌ காட்டிய அம்மாவின்‌ உண்மைத்‌ தொண்டர்களுக்கும்‌, நல்ல உள்ளங்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ உளப்பூர்வமான நன்றிகள்‌.

அம்மா அவர்கள்‌ உயிருடன்‌ இருந்தபோது, எப்படி அவர்‌ எண்ணத்தை செயல்படுத்தும்‌ சகோதரியாக இருந்தேனோ, அவர்‌ மறைந்த பிறகும்‌ அப்படித்தான்‌ இருக்கிறேன்‌. நான்‌ என்றும்‌ பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, தலைவியின்‌ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்‌ அன்பு தொண்டர்களுக்கும்‌, தமிழக மக்களுக்கும்‌ என்றென்றும்‌ நன்றியுடன்‌ இருப்பேன்‌.

பொற்கால ஆட்சி அமைய, நான்‌ என்றும்‌ தெய்வமாக வணங்கும் என்‌ அக்கா புரட்சித்தலைவியிடமும்‌, எல்லாம்‌ வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்‌.


இவ்வாறு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்

More News

நடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்!

தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் உச்சத்தை பிடித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மறைவை சினிமா ரசிகர்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும்

விளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால்? ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி  2-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று இருக்கிறது.

'தளபதி 65' பட நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமான 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

எனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல்ஹாசன் தனது பெயரில் ஒரு கதராடை நிறுவனத்தை ஆரம்பித்து இருப்பதாகவும், தன்னால் முடிந்த அளவு கதராடை நெய்யும் நெசவாளர்களுக்கு