close
Choose your channels

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

Tuesday, January 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா? மாட்டார்களா? என்பதை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது

ராஜீவ் கொலையாளிகள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவு செய்தது. இதுகுறித்து மத்திய அரசிடம் மாநில அரசு கருத்து கேட்டது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கருத்து கூறுவதற்கு பதிலாக திடீரென சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, ராஜீவ் கொலை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து, 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் முடிவெடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.