close
Choose your channels

அதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!


 

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடித்து இருக்கும் சூழலில் அதிபர் ட்ரம்ப்க்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பிரபல மாடல் அழகி ஒருவர் அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அதிபர் ட்ரம்ப் தனது சொத்துகளுக்கான வரியை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தவே இல்லை எனத் தெரிவித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், டொனால்டு ட்ரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக வருமானத்தை ஈட்டி வருகிறார். ஆனால் இந்த வருமானத்திற்கான வரி வருவாயை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. மேலும் தனது சொத்து நிறுவனங்கள் கடுமையான இழப்பீட்டைச் சந்தித்து வருவதாக ட்ரம்ப் கூறியதாகவும் அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் ட்ரம்ப் 750 டாலர் வரியை செலுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு பின்பு கடந்த 10 வருடங்களாக எந்த வரிவருவாயையும் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பின் நிறுவனங்கள் கடந்த 2018 இல் 7,427.4 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிய நிலையில் மேலும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக 47.4 மில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கேட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் அவரது நிறுவனங்களின் வரி வருவாய் குறைந்தது 4,434.9 மில்லியன் டாலராக இருக்கலாம் எனவும் நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய கருத்துக் கணிப்பில் தெரிவித்து இருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ட்ரம்ப் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவரது வழக்கறிஞர் ஆலன் கார்டன், நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த அறிக்கையில் “கடந்த தசாப்தத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார். இதில் 2015 இல் தனது வேட்புமனுவை அறிவித்ததில் இருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார்” என்று விளக்கம் அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.