close
Choose your channels

மனைவி, குழந்தைகளை கொலை செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய சாப்ட்வேர் எஞ்சினியர்

Monday, April 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிதாபாத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அதன் வீடியோவை தனது குடும்பத்தினர் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசிதாபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சுமித் குமாருக்கு அன்ஷூபாலா என்ற மனைவியும், ஆரவ், ஆக்ரிதி என்ற இரட்டை குழந்தையும், பிரத்மேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். அன்ஷூபாலா ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வேலையை ராஜினாமா செய்த சுமித்குமார், பொருளாதார கஷ்டத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்துவிட்டு பின் கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் கொலை செய்த பின்னர் வீடியோ எடுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குரூப்பில் அதன் வீடியோவை அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்ஷூபாலாவின் சகோதரர், மற்றும் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுமித்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.