close
Choose your channels

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? வைரலாகும் "சின்ன தல" யின் கணிப்பு!

Wednesday, March 23, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிஎஸ்கே அணி ரசிகர்களால் “சின்னத்தல“ என்று கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் சிஎஸ்கேவை விட்டுகொடுக்காமல் பேசியிருப்பதோடு, அடுத்த கேப்டன் யார் என்று கணித்து இருப்பதும் ரசிகர்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாத சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவர் சிஎஸ்கே இந்த ஆண்டு சிறந்த ஆல்ரவுண்டர்களோடு களம் இறங்க இருக்கிறது. மேலும் ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகிய நால்வரில் ஒருவர்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக வருவார்கள் என்றும் இவர்கள் நீண்ட காலமாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி நல்ல அனுபவம் பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி 15 ஆவது சீசன் போட்டியில் வெற்றிக் கோப்பையுடன் திரும்ப வேண்டும் என்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பது போன்ற கருத்துகளும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்தி நீண்ட காலமாக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளார் என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.