close
Choose your channels

பிடித்த ஹீரோ… பயோபிக்கிலும் நடிக்க வேண்டும் என மனம் திறக்கும்  சிஎஸ்கே வீரர்!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா தன்னைப்பற்றி பயோ பிக் எடுக்கப்பட்டால் அதில் முன்னணி நடிகர் சூர்யாதான் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். மேலும் நடிகர் சூர்யா தன்னுடைய ஃபேவரிட் ஹீரோ என்றும் தன்னுடைய கதாபாத்திரத்தை அவரால் இயல்பாக வெளிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை சிஎஸ்கே அணியின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் உங்களைப் பற்றிய பயோபிக்கில் யார் நடிக்க வேண்டும் என ஆசைபடுகிறீர்கள் எனக் கேட்டபோது தென்னிந்தியாவில் என்னைப் பற்றி பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் உறுதியாக நடிகர் சூர்யாதான் நடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரால்தான் என்னுடைய கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 3 ஆவது வாரம் முதல் அக்டோபர் வரை ஐபிஎல் தொடர் போட்டிகள் நடக்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இதனால் வீரர்கள் பலரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கேவின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவை தன்னுடைய ஃபேவரிட் ஹீரோ என்றும் தன்னைப் பற்றி பயோபிக் எடுக்கப்பட்டால் நடிகர் சூர்யா பொறுத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி.ஆர்.கோவிநாத்தின் பயோபிக்கான “சூரறைப் போற்று” திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.