close
Choose your channels

வரதட்சணை பேய்… மனைவியை கொலைசெய்து விட்டு 2 வருஷமா நாடகமாடிய இராணுவவீரர்!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேனி மாவட்டத்தில் உள்ள பார்ஸ்ட்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ஈஸ்வரன் (26). வரதட்சணை தகராறில் கடந்த 2019 டிசம்பர் 25 ஆம் தேதி தனது மனைவி கிரிஜாபாண்டி என்பவரை கொலை செய்துள்ளார். ஆனால் இந்தக் கொலையை ஈஸ்வரின் சகோதரர், தாய் மூன்று பேரும் சேர்ந்து மறைத்ததோடு கடந்த 2 வருஷமா பெண்ணின் பெற்றோர்களுக்கும் இந்தத் தகவல் தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் தேனி பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இராணுவத்தில் பணியாற்றி வந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கிரிஜாபாண்டி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என கிரிஜாபாண்டி கடந்த 2019 ஆம் ஆண்டு உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து ஈஸ்வரன் இராணுவத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த ஈஸ்வரன் கிரிஜாபாண்டியை கொடுமைப் படுத்தியதோடு அவர்களின் பெற்றோரிடம் பேசக்கூடாது எனவும் கண்டித்துள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சண்டையில் கிரிஜாபாண்டியை கொலையும் செய்துள்ளார். இதனால் பதறிப்போன ஈஸ்வரின் தாய், அவரது சகோதரர் (சின்ன ஈஸ்வரன்) ஆகிய 3 பேரும் சேர்ந்து கிரிஜாபாண்டியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி முல்லை ஆற்றில் வீசியுள்ளனர்.

மேலும் விசயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக கடந்த 3 வருடங்களாக அடிக்கடி வீட்டையும் மாற்றியுள்ளனர். இந்நிலையில் கிரிஜாபாண்டியை குறித்து அவர்களது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஈஸ்வரனை தேடிய போலீஸார் நாமக்கல் அடுத்த திருச்செங்கோட்டில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பே கிரிஜாபாண்டியை கொலைசெய்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் ஈஸ்வரன், அவரது சகோதரர், தாய் என 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.