close
Choose your channels

கேரள வெள்ளம்: விஜய் ரசிகர்களின் பெருமைக்குரிய பணி

Monday, August 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநில மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். கேரள மக்களின் துயர் துடைக்க ஜாதி, மத, இன, மாநில வேறுபாடின்றி இந்தியாவே உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு நிதியுதவும், அத்தியாவசிய பொருட்களும் குவிந்து வருகிறது

இந்த நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் வெள்ள நிவாரண பணியில் கடந்தசில நாட்களாக களமிறங்கியுள்ளனர். கண்ணூரில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒரு பேருந்து முழுவதும் நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அதேபோல் பெங்களூரில் இருந்து விஜய் ரசிகர்கள் அனுப்பிய நிவாரண பொருட்களை எடுத்து கொண்டு கோட்டயம் விஜய் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இதேபோல் பல பகுதிகளில் இருந்து விஜய் ரசிகர்களால் அனுப்பப்படும் பொருட்கள் எந்தவித சேதாரமும் இன்றி விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர். குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருந்து பொருட்கள் அதிகளவில் தரப்பட்டு வருகிறது.

விஜய் ரசிகர்களின் பெருமைக்குரிய இந்த சேவையால் அந்த பகுதி பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கும் விஜய்க்கும் நன்றி கூறி வருகின்றனர். தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் கேரளாவில் தான் உள்ளனர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.