close
Choose your channels

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசைக்கல்லால் கணவரை கொன்ற மனைவி

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலம் அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

சேலம் அருகே உப்புக்கிணறு என்ற பகுதியை செல்வகுமார்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாததால் செல்வக்குமார் தான் பார்த்து வந்த கிரானைட் பேக்டரி வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடினார். ஆனால் ஒரு மாதமாகியும் வேறு வேலை கிடைக்காததால் குடும்பத்தில் வறுமையும் பிரச்சனையும் அதிகமாகியது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு டூவீலர் மெக்கானிக் ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற, தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செல்லக்குமாரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து வழக்கம்போல் செல்வக்குமாரிடம் ஐஸ்வர்யா சண்டை போட அந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த ரவி, தோசைக்கல்லை எடுத்து செல்லக்குமாரின் மண்டையை உடைத்தார். இருவரும் மாறி மாறி தோசைக்கல்லால் அடித்து செல்வக்குமாரை கொலை செய்து பக்கத்து வீட்டின் கிணற்றில் போட்டுவிட்டனர். பின்னர் தன்னுடைய கணவரை காணவில்லை என்று ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் காணாமல் போன செல்வகுமாரை தேடி வந்த போலீசார் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து செல்வகுமார் உடலை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையின்போதே ஐஸ்வர்யா தானாக முன்வந்து செல்வகுமாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஐஸ்வர்யாவை கைது செய்த போலீசார் அவரது கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.