close
Choose your channels

நாயகன், நாயகிக்கு முன்னரே ஒப்பந்தமான யோகிபாபு!

Thursday, April 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ஒரு திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது முதலில் இயக்குனர், நாயகன், நாயகி ஆகியோர் முடிவு செய்த பின்னரே காமெடி நடிகர்கள் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ராகவா லாரன்ஸ் உதவியாளர் ஒருவர் இயக்கவுள்ள திரைப்படம் ஒன்றுக்கு நாயகன், நாயகி முடிவு செய்யப்படுவதற்கு முன்னரே யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் உதவியாளர் மில்கா செல்வகுமார் இயக்கவுள்ள பேய்ப்படம் 'பியார். இந்த படத்தின் நாயகன், இரண்டு பேய்க்காதலர்களை சேர்த்து வைப்பதுதான் கதை. முற்றிலும் காமெடி பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படத்தின் நாயகன், நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் மில்கா செல்வகுமார் தற்போது 'சண்டிமுனி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் நட்ராஜ் மனிஷா யாதவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.