கொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்

கொரனோ வைரஸிலிருந்து குணமான 103 வயது பெண்மணி ஒருவர் அதனை கொண்டாட கோல்டு பீர் கேட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரனோ வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதும் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 19,88,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 112,096 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் என்ற பகுதியை சேர்ந்த 103 வயது முதிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் கோரனோ வைரஸ் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை காரணமாக அவர் கொரனோ வைரஸிலிருந்து சில நாட்களிலேயே மீண்டார்.

இதனை அடுத்து தான் கொரோனாவில் இருந்து மீண்டதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் தனக்கு ஒரு கோல்ட் பீர் வேண்டும் என அந்த மருத்துவமனையின் நர்ஸிடம் அந்த முதிய பெண் கேட்டதாகவும் அதனை அடுத்து நர்ஸ் கோல்ட் பீர் கொடுத்ததாகவும், அதனை அவர் உற்சாகமாக அருந்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 103 வயது பெண் ஒருவரை கொரோனாவில் இருந்து மீண்டது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவில் 103 வயது பெண் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்தவுடன் அவர்களுக்கு திரையுலகம் வாய்ப்புகள் கொட்டும் என்று கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கூறினார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் பட தயாரிப்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த சோகமான சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயது சிறுவன் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.

தமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 1400க்கும் மேற்பட்டவர்கள் அதாவது 1438 பேர் பாதிப்பு அடைந்ததால்