தமிழகத்தில் பள்ளிச் சென்ற மாணவருக்கு கொரோனா பாதிப்பு… பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட பள்ளிக்குச் சென்ற சேலம் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதைக் குறித்து தமிழக அரசு கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த இந்த மாதம் 19 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் உள்ள பள்ளிக்குச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சக மாணவர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளியும் மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளையும் மாணவர்கள் நலன் கருதி 50% மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்ட ஒரு வழக்கில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெளியே வந்தப்புறம் தான் தெரிஞ்சது: ரியோவின் மனம்திறந்த வீடியோ!

மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும், இதனை அடுத்து இரண்டாவது ரன்னராக ரியோவும் தேர்வு செய்யப்பட்டனர்

இந்தியக் கிரிக்கெட் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது… கிரிக்கெட் ஜாம்பவானின் நெகிழ்ச்சி கருத்து!

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு உடல்நலக்குறைவா? வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

மகாபாரத கதையில் சமந்தா: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார்!

மகாபாரத காவியத்தில் உள்ள சகுந்தலை என்ற கதையில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தளபதி விஜயுடன் ஹாட்ரிக் அடிக்கும் சூப்பர் சிங்கர்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' மற்றும் 'மாஸ்டர்' படத்தில் நடித்த சூப்பர் சிங்கர் தற்போது 'தளபதி 65' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது