close
Choose your channels

10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரனோ: அதிர்ச்சி தகவல் 

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடைக்கானலில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத கொடைக்கானலுக்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு உறுதி செய்துள்ளது. இன்று முதல் இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டுகளையும் வெளியிட்டுள்ள அரசு, மாணவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தன்னுடைய பள்ளி இருக்கும் இடமான கொடைக்கானலுக்கு பெற்றோர்களுடன் காரில் சென்றார். அவர் கொடைக்கானல் சென்றடைந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என தெரியவந்தது.

இதனையடுத்து மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமன்றி அவர் சென்ற காரின் டிரைவர் மற்றும் அவருடைய பெற்றோர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos