10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரனோ: அதிர்ச்சி தகவல் 

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடைக்கானலில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத கொடைக்கானலுக்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு உறுதி செய்துள்ளது. இன்று முதல் இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டுகளையும் வெளியிட்டுள்ள அரசு, மாணவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தன்னுடைய பள்ளி இருக்கும் இடமான கொடைக்கானலுக்கு பெற்றோர்களுடன் காரில் சென்றார். அவர் கொடைக்கானல் சென்றடைந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என தெரியவந்தது.

இதனையடுத்து மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமன்றி அவர் சென்ற காரின் டிரைவர் மற்றும் அவருடைய பெற்றோர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அண்ணனை காதலித்து கர்ப்பமான 17 வயது சிறுமி: குமரியில் பரபரப்பு

17 வயது சிறுமி ஒருவர் தனது அண்ணன் முறை உறவுள்ள ஒருவரை காதலித்து கர்ப்பமான சம்பவம் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்ப்பிணி யானை கொலை குறித்து விஜயகாந்த் கருத்து:

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே மலப்புரம் என்ற பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடிமருந்து வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்து அந்த கிராமத்தினர் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்

மத்திய அமைச்சருக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி

'நேர்கொண்ட பார்வை' படத்தில் சொல்லப்பட்டிருந்த கண்டெண்ட் அஜித் போன்ற பெரிய ஸ்டார் நடித்ததால் எப்படி அனைவரிடமும் போய் சேர்ந்ததோ அதே போல் 'மூக்குத்தி அம்மன்'

காங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்!!! அரசியலில் நடக்கும் சுவாரசியம்!!!

இந்திய அரசியல் மட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுப்பது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.