10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் இந்த முடிவுகளை tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.inஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.