நம்பிக்கையோடு இருங்கள்: இஸ்ரோ சிவனுக்கு தமிழக சிறுமி கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,September 11 2019]

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டரை மீண்டும் இயங்க செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவுபகலாக தீவிரமுயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளூக்கும் ஆறுதல் கூறும் வகையில் தமிழகத்தை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி நதியா என்பவர் ஒரு கடிதம் எழுதி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சந்திரியான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான். சந்திரியான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என்றும், பின்பு விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன். ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்

பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரியான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள். இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும், எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.

விக்ரம் லேண்டருக்கு எந்த விதம் சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான்.முயற்சி திருவினையாக்கும். கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை எழுதிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

வைரலாகி வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மலையாள டுவீட்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் டுவீட்டுக்களை பதிவு செய்தாலும் அவ்வப்போது தமிழிலும் அவர் டுவீட் பதிவு செய்வதுண்டு.

'பிகில்' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை தந்த அர்ச்சனா!

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் அப்டேட்டுக்கள் இந்த மாதம் அடிக்கடி வெளிவரும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஏற்கனவே கூறியிருந்தார்.

விஜய்சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிருத்!

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதையும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது

டிசம்பரில் வெளியாகும் பிரபுதேவாவின் 'ஜல்லிக்கட்டு காளை

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவா தற்போது சல்மான்கான் நடித்து வரும் 'தபங் 3' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா! தந்தையின் கண்டிப்பால் அதிர்ச்சியில் லாஸ்லியா

பல வருடங்களாக சந்திக்காத லாஸ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லாஸ்லியாவை சந்தித்தது குறித்து இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் பார்த்தோம்.