close
Choose your channels

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக தமிழக அரசிடம் தகவல் தெரிவித்து தங்களை தாங்களே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட உடன் பலர் தாங்களாகவே முன்வந்து உள்ளதாகவும், அவர்களுக்கு இரவு பகலாக செய்த பரிசோதனையில் தான் தற்போது 110 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் டெல்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு மட்டும் மொத்தம் 190 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 80 பேர்கள் மற்றும் இன்று 110 பேர்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பதும், இந்த மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் 1103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து இன்று கண்டறியப்பட்டவர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.