close
Choose your channels

இன்று ஒரே நாளில் 15 பேர்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது சென்னை

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் சென்னை மாவட்டம் இன்றும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 110 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தை சென்னை பிடித்துள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 59 பேர்களும், திண்டுக்கல்லில் 45 பேர்களும் நெல்லையில் 38 பேர்களும், ஈரோட்டில் 32 பேர் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மிகக் குறைந்தபட்சமாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos