அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1169 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இருப்பதால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் இதுவரை 10,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சிகிச்சையின் பலனாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்

மேலும் இதுவரை கொரோனா வைரசால் அமெரிக்காவில் மொத்தம் 6059 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்து 44 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 1,15,242 பேர்களும், ஸ்பெயினில் 1,12,065 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More News

உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா இருக்கிறதா??? தெரிந்துகொள்ள  இந்த செயலியை பயன்படுத்துங்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர், நெல்லை போல் சென்னையில் கிடைக்குமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மளிகை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி!

எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போதும் பொதுமக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வந்த பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவியை சமூகவலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர் 

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளியூர்களில் சிக்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர்

லைட்டை ஆஃப் பண்ணிட்டு தீபம் ஏற்றுங்கள்: பிரதமர் மோடி உரை

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையிலும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை