ஆண் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஃபேஸ்புக் நட்பின் மூலம் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் நாசமான அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரால் சீரழிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தக்கலை என்ற பகுதியில் நடந்துள்ளது.
தக்கலையில் உள்ள கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பொதுத்தேர்வு முடிந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை அவருடைய ஆண் நண்பர் நிதின், பைக்கில் ஊர்சுற்றலாம் என்று அழைத்து சென்றுள்ளார். ஆனால் திடீரென நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்யலாம் என்று ஆசை காட்டிய நிதின், இடையில் 18 வயது சிறுவன் ஒருவனையும் அதே பைக்கில் ஏற்றியுள்ளார்.
இந்த நிலையில் சிறுவனின் உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று அந்த மாணவியை அழைத்து சென்ற நிதின், அந்த வீட்டில் மாணவியை நிதினும் அந்த சிறுவனும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த யாரிடமும் சொல்லக்கூடாது என்று வீடியோவை காட்டியும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நிதினின் செல்போன் மூலம் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், மாணவியை மீட்டதோடு, நிதினையும், சிறுவனையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆண் நண்பர்கள் என்ற வேடத்தில் இருக்கும் இதுபோன்ற கயவர்களிடம் இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே இந்த கொடூர சம்பவம் கற்று கொடுத்த பாடமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments