close
Choose your channels

12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூஷன் வாத்தியார் மீது வழக்குப்பதிவு

Friday, July 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

12 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டியூஷன் வாத்தியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க டியூஷன் வாத்தியார் ஏற்பாடு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் 12 வயது பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்தனர். 21 வயதான அந்த வாத்தியார், 12 வயது சிறுவனுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென ஒருநாள் சிறுவனுக்கு வயிற்றுவலி வந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்களும் சாதாரண வயிற்று வலி என நினைத்து சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தனர். ஆனால் வயிற்று வலி நிற்கவில்லை. உடனே சிறுவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது தனது டியூஷன் வாத்தியார் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறியதால் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த வாத்தியார் மிரட்டி உள்ளதால் சிறுவன் யாரிடமும் சொல்லாமல் மறைத்து உள்ளான் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து மாணவனை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய டியூஷன் வாத்தியார் மீது காவல்துறையினர் இயற்கைக்கு மாறான செக்ஸ் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.