ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற லண்டன் வாழ் இந்திய சிறுவன்

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி 12 வயது அனன்யா வினய் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.உலக அளவில் சாதனை படைத்து வரும் இந்திய குழந்தைகள்
இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த 12 வயது ராகுல் என்ற சிறுவர் ஒரே இரவில் இதே போன்ற ஒரு போட்டியின் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ளார். லண்டனை சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நடத்திய 'சைல்ட் ஜீனியஸ்' என்ற நிகழ்ச்சியில் முதல் சுற்றில் கேட்கப்பட்ட 15 கேள்விகளில் 14 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 15வது கேள்வி கேட்கப்படுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச்சரியாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததன் மூலம் ஒரே இரவில் அவர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். மேலும் ராகுலின் ஐக்யூ 162 என்று இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இவருடைய ஐக்யூ என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்கு இணையானதாக கருதப்படுகிறது.
20 சிறுவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதலிடம் பெற்ற ராகுல் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்பெல்லிங் டெஸ்ட், மெமரி ரவுண்டு ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்த ராகுல் அடுத்து கணித டெஸ்ட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

More News

'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் 'நீதானே' டீசர் எப்படி?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது என்பதும், இந்த பாடலின் டீசர் 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....

பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சக்தி

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சக்தி, தற்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து தனது தவறை உணர்ந்திருப்பார் போல் தெரிகிறது. குறிப்பாக ஓவியாவை சக்தி அடிக்க போன விவகாரம் தொடர்பாக ஓவியா ஆர்மியினர்களின் டுவீட்டுக்கள் சக்திக்கு பல விஷயங்களை புரிய வைத்துள்ளது...

இன்று இரும்புப்பெண்மணி இரோம் ஷர்மிளா திருமணம்

இந்தியாவின் இரும்புப்பெண்மணியும், சமூக போராளியுமான   இரோம் சர்மிளா இன்று தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ அவர்களை கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்கிறார்...

ஃபைனான்சியர் போத்ரா குடும்பத்தினர்களின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: போலீஸ் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டி வந்த ஃபைனான்சியர் போத்ரா சமீபத்தில் குண்டர் சட்டத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே....

பிந்துவிடம் அறை வாங்குவாரா சினேகன்?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் நொந்து நூலாகி இருக்கும் நிலையில் இனிமேல் பிக்பாஸையே பார்க்க மாட்டேன் என்று பலர் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.