close
Choose your channels

12ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியை: மாணவன் செய்த விபரீத செயல்!

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

12ஆம் வகுப்பு மாணவருடன் ஆசிரியை தகாத உறவில் இருந்த நிலையில் மாணவன் செய்த விபரீத செயல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த உறவு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவன் இருந்ததாகவும் ஆனால் ஆசிரியை மாணவனை அவதூறான தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஆசிரியையை கொலை செய்ய முடிவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாணவனை கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவன் கொலை செய்தார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது. 12ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தகாத உறவில் இருந்த நிலையில் மாணவரின் விபரீத செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.