close
Choose your channels

திருமணமான 13 நாட்களில் பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை! கணவர் கைது!

Wednesday, September 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது என்பது தெரிந்ததே. பூனம் பாண்டேவும் தனது திருமணக் கோலத்துடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே தற்போது திருமணமான 13 நாட்களில் தனது கணவர் சாம் பாம்பே மீது பாலியல் புகார் ஒன்றை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்

தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து வருவதாகவும் அதுமட்டுமின்றி தன்னை மிரட்டுவதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த புகாரின் பேரில் அவரது கணவர் சாம்பே அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.