close
Choose your channels

குளிர்பானம் குடித்த 13 வயது சிறுமி உயிரிழப்பு… பதைக்க வைக்கும் தகவல்!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் வசித்த 13 வயது சிறுமி ஒருவர் மளிகை கடையில் இருந்து ரஸ்னா எனும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்தப்பின்பு மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பெசண்ட் நகர் அடுத்த ஓடை மாநகரி எனும் பகுதியில் வசித்து வரும் சதீஷ்-காயத்ரி தம்பதிகளின் இரண்டாவது மகள் தரணி(13). இவர் சிறுவர்களுடன் விளையாடிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் ரஸ்னா வாங்கிக் குடித்துள்ளார். இதனால் வாந்தி எடுத்து, மயக்க நிலைக்கு சென்றதோடு அவரது வாயில் இருந்து சிவப்பு நிறத்தில் ரத்தம் வழிந்து இருக்கிறது.

இதைப்பார்த்து பயந்துபோன சிறுமியின் சகோதரி, தனது அம்மாவை அழைத்து காண்பித்து இருக்கிறார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சாஸ்திரி நகர் போலீஸார், சிறுமியின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என விசாரித்து வருகின்றனர். அதோடு உயிரிழப்புக்கு காரணம் குளிர்பானமா? என்பதை அறியும் பொருட்டு உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.