close
Choose your channels

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி: ஆச்சரிய தகவல் 

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்கு திரும்பி கைக்குழந்தையுடன் பணி செய்து கொண்டிருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சௌமியா பாண்டே. இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கர்ப்பிணியாக இருந்த சௌம்யாவுக்கு செப்டம்பர் மாதம் இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டே வாரங்களில் அவர் தனது பிரசவ விடுமுறையை முடித்துவிட்டு கைக்குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளது அனைவரைக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது குறித்து செளம்யா பாண்டே கூறியபோது ’நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அதனால் எனது பணியை நான் கண்டிப்பாக செய்ய வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கியுள்ளார். எனது குழந்தையையும் நிர்வாக பணியையும் கடவுளின் அருளால் என்னால் கவனித்துக் கொள்ள முடியும். மாவட்ட நிர்வாகம் என்பது எனது குடும்பம் போன்றது. எனது குடும்பத்தினர் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்வதே சரியானதாக இருக்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார், குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ள ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.