ரூ.26 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்கள்… தமிழகத்தை சீர்ப்படுத்தும் எடப்பாடியார்!!!

 

அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித் திட்டப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது ரூ.36.73 கோடி மதிப்பிலான 39 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் இதுவரை அரியலூர் மாவட்டத்தில் செய்ப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகளைக் குறித்து விளக்கம் அளித்தார்.

அதோடு 21 ஆயிரத்து 504 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கினார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதன் கட்டுமான பணிகளை கண்காணிக்க பொதுப்பணித் துறையில் ஓய்வுப்பெற்ற அதிகாரி பாண்டியராஜனை நியமிக்கவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

முன்னதாக கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதன் முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன.

அதோடு சமீபத்தில் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கான இடஒதுக்கீட்டில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு வசதியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்து இருந்தார். இந்த திட்டத்தால் தமிழகத்தில் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அதிரடி திட்டத்தால் தமிழக முதல்வர் தமிழகத்தை மென்மேலும் உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

More News

ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது… காட்டத்துடன் உச்சநீதிமன்றம்!!!

டெல்லியில் 22 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

சாலையில் நடந்து சென்றவர் மீது இடிந்து விழும் கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல்மாடி தூண் இடிந்து விழும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது

சத்யராஜ் மகள் சேரும் அரசியல் கட்சி இதுவா? ரஜினிக்கு சிக்கலா?

ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் போது திடீரென நடிகர் நடிகைகள் ஒரு சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்வார்கள் என்பது தெரிந்ததே

பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கத் தண்டனையா??? அசத்தும் புதுச்சட்டம்!!!

பாகிஸ்தான் அரசாங்கம் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சடத்த்திற்கு ஒப்புதல் வழங்கி அதிரடி காட்டி இருக்கிறது.