தந்தை ஆபாச படம் பார்த்ததால் கொலைகாரனாகிய 14 வயது மகன்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

தந்தை ஆபாச படம் பார்த்ததால் அவரது 14 வயது மகன் 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் என்ற கிராமத்தில் 9 வயது சிறுமி மல்லிகைத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு அதன்பின் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் இந்த சிறுமியின் கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தான் காரணம் என்பது தெரிய வந்ததால் அந்த சிறுவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் 14 வயது சிறுவனின் தந்தை அடிக்கடி செல்போனில் ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்ததாகவும், இதனை பார்த்த அந்த சிறுவன் தந்தை இல்லாத நேரத்தில் அவர் பார்த்த ஆபாச படங்களை பார்த்து உள்ளதாகவும் தெரிகிறது. ஆபாச படத்தை பார்த்து விட்டு அது போல் செய்ய முடிவு எடுத்த அந்த சிறுவன் தனது வீட்டு அருகில் உள்ள 9 வயது சிறுமி மல்லிகை தோட்டத்திற்கு தனியாக செல்வதை பார்த்து அந்த சிறுமியை பின்தொடர்ந்தது சென்றதாகவும் அந்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது

இதனையடுத்து அந்த சிறுமி தனது அம்மாவிடம் சொல்லி விடுவதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் யூடியூப்பில் பார்த்த வேறு ஒரு வீடியோவின்படி, கல்லை எடுத்து அந்த சிறுமியின் தலையில் போட்டுள்ளதாகவும், இதனால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளதாகவும் தெரிகிறது

சிறுமியை காணாததால் அவரது பெற்றோர்கள் தேடிய நிலையில் மல்லிகை தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த சிறுவன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு தந்தையின் தவறான செயலால் 14 வயது மகன் கொலைகாரன் ஆகி இருப்பது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்!!! யார் தெரியுமா???

உலக நாடுகளில் தலைமை வகிக்கும் பெண் அதிபர்கள் கொரோனா பரவலை மிக நேர்த்தியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையாண்டனர் என்ற பாராட்டு மழை குவிந்து வருகிறது.

உலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா???

14 ஆம் நூற்றாண்டில் பரவிய பிளேக் நோய்த்தான் குவாரண்டைன் என்ற சொற்றொடரை உருவாக்கியது.

'மாஸ்டர்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமா? படக்குழுவினர் விளக்கம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸுக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிய பின்னர்

கமல், மணிரத்னம் படங்களுக்கு பணி செய்யும் பிரபல நடிகரின் நிறுவனம்

கோலிவுட் திரையுலகில் உருவாகி வரும் பிரமாண்ட படங்களில் கமலஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் மணிரத்னம் அவர்களின் 'பொன்னியின் செல்வன்' ஆகியவை என்பது தெரிந்ததே.

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும்