பிறந்த குழந்தையை ஃப்ரிசரில் வைத்த இளம்பெண்…

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

 

ரஷ்யாவில் 14 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைப்பதற்காக பிறந்த குழந்தையை ஃப்ரீசரில் வைத்த சம்பவம் கடும பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரத்தை அடுத்த வெர்க் துலா எனும் கிராமத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமி பெற்றோருக்குத் தெரியாமலே கர்ப்பம் அடைந்து இருக்கிறார்.

மேலும் பிரசவத்தையும் தன்னுடைய அறையிலேயே யாருக்கும் தெரியாமல் தானாகவே செய்து கொண்டிருக்கிறார். பிரசவத்தில் அவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையைப் பற்றி பெற்றோருக்குத் தெரியகூடாது என்பதற்காக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு கேரேஜில் உள்ள ஒரு ஃப்ரீசரில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தானாக செய்துகொண்ட பிரசவத்தால் சிறுமிக்கு இரத்தப்போக்கு அதிகமாகி இருக்கிறது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவருடைய தாய் ஆம்புலன்ஸை வரவழைத்து இருக்கிறார். ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்த போதுதான், தனக்கு பிரசவம் நடந்ததாகவும் அதனால் ஏற்பட்ட இரத்தப்போக்கு இது என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நலையில் பிறந்த குழந்தையைப் பற்றி கேட்டபோது கேரேஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்

இதையடுத்து அங்கு விரைந்த மருத்துவக் குழுவினருக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. காரணம் ஏற்கனவே கடும் குளிரைத் தாங்க முடியாத அந்தக் குழந்தை இறந்திருக்கிறது. மேலும் இந்தக் கர்ப்பத்தைக் குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது கடந்த கோடை விடுமுறையின் போது ஒரு 16 வயது சிறுவனால் ஏற்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் மர்ம நோய்… விஞ்ஞானிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய அதிர்ச்சி!!!

அமெரிக்காவில் இதுவரை கவனத்தில் வராத புதிய வகை நோய்த் தாக்கம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம்: ரஜினி குறித்து குஷ்பு டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவு செய்யப்படுகிறது

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: 300 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

நீங்க எப்படி என்கிட்ட இப்படி சொல்லலாம்? வெடித்தது அர்ச்சனா-ஆரி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நுழைந்தது முதல் நாட்டாமைத்தனம் செய்து வருகிறார் என்பதும் அவரது டாமினேஷன் சில சமயங்களில் அத்துமீறி இருப்பதாக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.