தமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 1400க்கும் மேற்பட்டவர்கள் அதாவது 1438 பேர் பாதிப்பு அடைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றும் நேற்றை விட 20 பேர் அதிகமாக அதாவது 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக 1400க்கும் மேற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இன்று தமிழகத்தில் 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1458 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1146 பேர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20993 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 16,022 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 576,695 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

More News

ஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது

கடந்த பல ஆண்டுகளாக 1,400 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஸ்பை கேமராக்கள் மூலம் எடுத்த பலே குற்றவாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் 

கர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு 

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள்

கூகுள் இன்காக்னிடோ பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு

உலகில் பெரும்பாலானோர் கூகுள் குரோம் பிரவுசரை தான் பயன்படுத்தி வரும் நிலையில் ஒருசில பயனாளிகள் மட்டும் தங்களுடைய பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ் உள்ளிட்ட தகவல்கள்

'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'மாரி 2'. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த டொவினோ தாமஸ்க்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

அவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால், மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக புகழப்படுபவர் நடிகை மஞ்சுவாரியர். கணவர் திலீப்பை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும்