close
Choose your channels

பாதிக்கப்பட்ட நடிகை மீதே வழக்கா? 15 ஆண்டு நடந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வரே அவர்தான் என 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்

கடந்த 2007ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெர்ரி மற்றும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகிய இருவரும் திடீரென பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொண்டனர். பொதுவெளியில் நடிகை ஷில்பா செட்டி ஆபாசமாக நடந்து கொண்டதாக பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகை ஷில்பா ஷெட்டி மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரே அந்த நடிகை தான் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.