close
Choose your channels

பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 150 கார்கள் எரிந்து சேதம்

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னரே இந்த கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டு சுமார் 150 கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை பார்க்க வந்த பார்வையாளர்களின் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பெங்களூர் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை சிலமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.