close
Choose your channels

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு?

Monday, March 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் சமீபத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றனர் என்றும், அந்த 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் சோதனை முடிவு வந்தபின்னரே அவர்களில் எத்தனை பேர்களுக்கு கொரோனா என்பது தெரிய வரும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மீதி பேர்களை கண்டுபிடிக்கும் பணியில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவும் சூழல் ஏற்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos