close
Choose your channels

டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்!

Tuesday, August 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து லைக்ஸ்களை குவிக்க பலர் ரிஸ்க் எடுப்பது தெரிந்ததே. அந்த வகையில் சிலசமயம் உயிரையும் இழக்கும் அபாயமும் ஏற்படும். அந்த வகையில் டிக்டாக்கில் பதிவு செய்ய ரயில்முன் வீடியோ எடுத்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மேற்குவங்கத்தில் நடைபெற்றுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முகமது நூர் அன்சாரி, மற்றும் சவுக்கத் அலாம் ஆகிய இருவரும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். ரயில் தண்டவாளத்தில் ரயில் அருகே வரும் வரை தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்து லைக்ஸ்களை குவிப்பது இந்த இருவரின் வழக்கமாக இருந்தது நேற்று ஞாயிறு என்பதால் வழக்கம்போல் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வரும்போது டிக்டாக் வீடியோ எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது திடீரென உள்ளூர் ரயில் ஒன்று பின்னால் வந்துள்ளது. இதனை கவனிக்காமல் வீடியோ எடுத்து கொண்டிருந்த நூர் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல்சிதறி மரணம் அடைந்தார். சவுக்கத் அலாமுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் போல் டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்க சென்றான். ஆனால் இன்று பிணமாகதான் வந்தான் நூர் அன்சாரியின் உறவினர்கள் கதறிய அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது. டிக்டாக் வீடியோ எடுக்க ரயில் தண்டவாளம் போன்ற ரிஸ்கான இடத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos