close
Choose your channels

16 வயது சிறுமியின் நட்பும் காதலும்: காட்டில் பிணமாக கிடந்த பரிதாபம்!

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நட்புடன் ஒருவரிடமும், காதலுடன் ஒருவரிடம் பழகிய நிலையில் திடீரென காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போனார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே காட்டு பகுதியில் ஒரு இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சென்று பார்த்த போது, காணாமல் போன 16 வயது சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்

இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது அந்த சிறுமி, மதிகுமார் என்ற 21 வயது கட்டிட தொழிலாளியிடம் நட்புடனும் இன்னொரு வாலிபருடன் காதலுடனும் பழகி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிகுமார், அந்த சிறுமியை கண்டித்து உள்ளதாக தெரிகிறது இருப்பினும் சிறுமி தனது காதலை தொடர்ந்ததால் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மதி, அவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது முகத்தில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்

இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 16 வயது சிறுமி ஒருவர் இரண்டு இளைஞர்களிடம் ஒரே நேரத்தில் பழகியதால் ஏற்பட்ட விபரீதம் அந்த பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.