close
Choose your channels

16 வயது சென்னை சிறுமியை திருமணம் செய்து நண்பருக்கு விருந்தாக்கிய வாலிபர்!

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை திரு.வி.க நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் சிறுமியை அரக்கோணத்திற்கு பெருமாள் அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் பெருமாள் தன்னுடைய நண்பர் அரவிந்த் என்பவருக்கு சிறுமியை விருந்தாக்கியுள்ளார். இருவரும் சேர்ந்து பல நாட்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் சிறுமி அரக்கோணத்தில் தங்கியிருப்பது தெரிய வந்ததும் உடனடியாக அரக்கோணம் சென்ற போலீசார் சிறுமியை மீட்டதுடன், பெருமாள், அரவிந்த் இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.