ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,May 16 2020]

மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதன்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இருக்கும் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சிறப்பு ரயில் ஒன்று கடந்த புதன்கிழமை இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலில் 1340 பயணிகள் பயணம் செய்தனர். இந்த சிறப்பு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை ஹரித்துவார் வந்தபோது பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பயணிகளை எண்ணியபோது 1173 பயணிகள் மட்டுமே இருந்தனர். 1340 பயணிகள் சூரத்தில் இருந்து கிளம்பிய நிலையில் ஹரித்துவாரில் 1173 பயணிகள் மட்டுமே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதமுள்ள 167 பயணிகள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாக உள்ளது

ஹரித்துவாரில் செய்யப்படும் கொரோனா சோதனைக்கு பயந்து இடையில் 167 பேர் இறங்கி தப்பி ஓடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை அடுத்து மாயமான பயணிகள் என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரயில்வேத்துறை மற்றும் ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்த 167 பயணிகள் திடீரென மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கொரோனா தடுப்பு மையமாக மாறும் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம்!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிகவும் முக்கியமான ஸ்டேடியம் மும்பை வான்கடே ஸ்டேடியம் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகள்

மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி செய்த வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாஸ்க் அணிவது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் கட்டாயமாக உள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோன பரவல் நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி???

கொரோனா பரவல் கடும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனாவில் புதிய அவதாரம் எடுத்து வரும் பேய் கிராமங்கள்!!! எங்கே தெரியுமா???

உத்திரகாண்டில் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது