"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..!

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கறிக் கடையில் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாததால், சிக்கன் மூலம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே நெய்வேலியில் உள்ள கடை ஒன்றில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து அதிர்ந்துபோன கடை உரிமையாளர் பக்ருதீன் அலி முகமது என்பவர், நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் இளைஞர் மீது புகார் அளித்தார்.

புகாரில் தான் 20 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருவதாகவும், தனது கடையில் தினம் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 17 வயது இளைஞர் ஒருவர், வாங்கிய சிக்கனுக்கு பணம் கொடுக்கமுடியாததால் தனது கடையை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் தெரிவித்தார். புகாரின் பெயரில் இளைஞர் மீது தவறான தகவலை பரப்புதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். அவருக்கு 17 வயது ஆவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

More News

கால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை! வைரல் வீடியோ..!

ஸ்காட்லாந்தில் ஸ்காட்டிஷ் அணிக்கும் கலிடோனியன் அணிக்கும் இடையே பெண்கள் கால்பந்து போட்டி

பிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம் 

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானிசங்கர் நடித்துவரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது 

'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட்டில் கடந்த 1993 ஆம் ஆண்டு தயாரான 'ஜுராசிக் பார்க்' என்ற திரைப்படம் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்து அனைவரையும் அதிர வைத்தது.

ரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு!

பொதுவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்தாலோ, அல்லது ஒரு மேடையில் பேசினாலோ அல்லது ஒரு கருத்தை தெரிவித்தாலோ உடனடியாக தமிழக அரசியல்வாதிகள் ரியாக்சன் செய்வது வழக்கமான ஒன்றாக

நம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து!

டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 34 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர்