close
Choose your channels

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகரை அடுத்த குமாரலிங்கபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும், இந்த சந்திப்பு நட்பாக மாறி அடுத்தகட்டமாக காதலாக மாறியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சிறுவனும் சிறுமியும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் வேலை தேடி வருகிறேன் என்று அந்த சிறுவன் திருப்பூர் சென்று பல மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை என்றும், இதனையடுத்து சிறுமி கர்ப்பம் ஆனதால் சிறுவனைத் தேடி திருப்பூருக்கு சென்று அவரை கண்டுபிடித்து 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை வைத்து குடும்பம் நடத்தும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

ஆனால் சிறுமி கர்ப்பம் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன், அந்த சிறுமியை திட்டியதோடு தன்னால் ஒரு கர்ப்பமான பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி விருதுநகருக்கு மீண்டும் திரும்பி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனின் செயலால் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.