close
Choose your channels

25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது!

Friday, November 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவையாறு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவையாறு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த பெண்ணின் வீட்டின் பக்கத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து போவதால் அந்த சிறுவனுக்கும் பெண்ணுக்கும் அக்கா-தம்பி உறவு போல் நல்ல பழக்கம் இருந்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் அந்த பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது 17 வயது சிறுவன் அவருக்கு தெரியாமல் குளிப்பதை வீடியோ எடுத்து உள்ளார். இதனை தற்செயலாக கண்டுபிடித்த அந்த பெண் கூச்சலிட்டு அலறினார். இதனை அடுத்து நேராக அந்த சிறுவனிடம் சென்று குளிப்பது ஏன் வீடியோ எடுத்தாய்? என்று கேட்டபோது அந்த பெண்ணை சிறுவன் மிரட்டியதாக தெரிகிறது. மேலும் இதை வெளியே சொன்னால் அது குளியல் வீடியோவை இணையதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது

இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். அந்த சிறுவனின் செல்போனை சோதனையிட்ட போது அந்த செல்போனில் பெண்ணின் குளியல் வீடியோ இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.