close
Choose your channels

கால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Thursday, October 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது 17 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடலை கால்வாயில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பராபங்கி என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞரை காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு காதலை கைவிடுமாறு அவர்கள் அறிவுரை கூறினர். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட இளம்பெண், அதன் பின் காதலரை சந்திக்க வில்லை என்றும், காதலரிடம் இருந்து வரும் போன் மற்றும் மெசேஜ்களுக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் காதலர் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கடத்தி, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ஆபத்து என்று எண்ணி அந்த பெண்ணை கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசி உள்ளனர்

கால்வாயில் நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் மிதந்து வந்ததை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்ததில் இளம்பெண்ணின் காதலர் மற்றும் அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் இளம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.