close
Choose your channels

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, மாடியில் இருந்து வீசிய இளைஞர்கள்… பகீர் வீடியோ!

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 3 இளைஞர்கள் அந்தச் சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியெறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரா நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அருகில் உள்ள சில இளைஞர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அவரது வீட்டின் 2 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசியெறிந்து உள்ளனர். அதனால் படுகாயம் அடைந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்றும் தற்போது சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் தந்தை, கடந்த சில தினங்களாகவே எனது மகளுளைச் சில இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தனர். கடந்த திங்கள்கிழமை போன்செய்து மிரட்டல் விடுத்தனர். பின்பு நேற்று இரவு வீட்டிற்கே வந்து எனது மகளை துன்புறுத்தி உள்ளனர். மேலும் தூக்கிச் செல்ல முயன்ற நிலையில் எங்களுடைய சத்தம் கேட்டு 2 ஆவது மாடியில் இருந்து வீசியெறித்து விட்டனர் என அவலக் குரலில் தெரிவித்து இருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியை மாடியில் இருந்து வீசும் வீடியோ சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.