close
Choose your channels

உபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்?

Friday, April 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்களில் 264 கொரோனா பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே பிற மாநிலங்களும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்களால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos