close
Choose your channels

சென்னையில் 1407 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று தமிழகத்தில் எவ்வளவு?

Thursday, June 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் எகிறி கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் இன்று 1875 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 38716 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1875 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1407 பேர்கள் என்பதும், இதனால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 27398 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இன்றுதான் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

மேலும் இன்று கொரோனாவுக்கு தமிழகத்தில் 23 பேர்கள் பலியாகியுள்ளதால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவில் இருந்து 1372 பேர் குணமாகியுள்ளனர் என்பது மட்டுமே ஒரு ஆறுதலான தகவல் ஆகும். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 20705 பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று 16829 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதுவரை மொத்தம் 655,675 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.